• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சி
- சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமாக உலக மக்களை அறிவூட்டும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கவனம் பல்வேறுபட்ட சுற்றாடல் பிரச்சினைகளுக்கு ஆட்படுத்தும் நோக்கில் ஐக்கியநாடுகள் சுற்றாடல் அமைப்பின் ஆரம்ப திகதியாக யூன் மாதம் 05 ஆம் திகதியை ஒவ்வொரு ஆண்டும் "சருவதேச சுற்றாடல் தினம்" ஆக கொண்டாடப்படுகின்றது. “வனவுயிர் வளங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை எதிர்ப்போம்" என்னும் தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டுக்கான சருவதேச சுற்றாடல் தினம் கொண்டாடப்படுவதோடு, சருவதேச சுற்றாடல் தின தேசிய நிகழ்ச்சித்திட்டமானது 2016 யூன் மாதம் 05 ஆம் திகதி மாத்தளை மாவட்டத்தில் நடாத்துவதற்கும் 2016 மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து 2016 யூன் மாதம் 05 ஆம் திகதி வரை தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தி இதற்குரிய சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களை சகல அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குபற்றுதலுடனும் தனியார் மற்றும் அரசார்பற்ற துறைகளின் செயற்பாட்டு ரீதியான பங்களிப்புடனும் நடைமுறைப்படுத்தும் பொருட்டும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.