2016-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேரவாத பௌத்த தர்மத்தை இந்தி மொழியில் கற்பிப்பதற்காக சாஞ்சியில் பிரிவெனாவொன்றைத் தாபி்த்தல் - தேரவாத பௌத்த தர்மம் இந்தியாவில் பிரபல்யமாக முன்பு இருந்த போதிலும் தற்போது அதனை பின்பற்றுவது குறைவடைந்து வருகின்றதோடு, தேரவாத பௌத்த தர்மத்தை கற்பிப்பதற்காக முறையாக தாபிக்கப்பட்ட நிறுவனமொன்று இந்தியாவில் இல்லை. இதற்கமைவாக அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் தேரவாத பௌத்த தர்மத்தை இந்தி மொழியில் கற்பிப்பதற்காக முக்கியமான பிரிவெனா ஒன்றை சாஞ்சியில் தாபிப்பதற்குத் தேவையான பணிகளை ஒழுங்கு செய்வதற்கும் அதிமேதகைய சனாதிபதி அவர்கள் சாஞ்சிக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது இது சம்பந்தமாக மத்திய பிரதேசத்தின் முதலமைச்சருடன் கலந்துரையாடி தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|