2016-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இந்திய அரசாங்கத்தின் உதவியின் மீது ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களுக்காக நிருமாணிக்கப்படவுள்ள 4,000 வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்தல் - இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் 2016 - 2019 வரையிலான காலப்பகுதியில் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் 4,000 வீடுகளை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, இதன் முதலாவது கட்டமாக 2016 ஆம் ஆண்டில் 1,134 வீடுகளை நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கு குடிநீர், மின்சாரம், நுழைவுப் பாதை, சுவர், வடிகாலமைப்பு போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் பொருட்டு மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |