• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கட்டமைப்பு
- விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பம் பயன்படுத்தப்படுத்துவதற்கு விரிவாக தேவைப்படும் முக்கிய பத்து துறைகளாக நீர், உணவு, போசாக்கு, கமத்தொழில், வீடமைப்பு, சுற்றாடல், வலுசக்தி, புடவைக் கைத்தொழில், பெற்றோலிய வளம், மென்பொருட்கள் மற்றும் அறிவு சார்ந்த சேவை, வளர்ச்சியடைந்து வரும் தொழினுட்பம் மற்றும் மரபுவழி அறிவு போன்றவை இனங்காணப்பட்டுள்ளன. இந்தத் துறைகளுக்கு விஞ்ஞான மற்றும் தொழினுட்ப தீர்வுகளை வழங்குவதன் மூலம் பொதுமக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துதல் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துதல் இலங்கையில் அறிவினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை மேம்படுத்துதல் என்பவற்றைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதற்கமைவாக, உரிய துறையில் தேர்ச்சி மிக்க அமைப்புகளினதும் ஆட்களினதும் முக்கிய விஞ்ஞானிகளினதும் பொது மக்களினதும் பங்குபற்றுதலுடன் தயாரிக்கப்பட்டுள்ள விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கட்டமைப்பு "இலங்கை தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கட்டமைப்பு" என ஏற்றுக் கொள்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.