• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமுதாயத்திற்கான விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மன்றம்
- உலகளாவிய மட்டத்தில் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப துறைகளில் நிகழ்ந்துள்ள அபிவிருத்தியின் ஊடாக இலங்கை சமூகம் அடைந்துள்ள வாய்ப்புகளை ஆராய்தல், இலங்கை சமூகத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பம் சார்பிலான நிலைமையை கலந்துரையாடுதல் விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பத்தை இலங்கை சமூகத்தில் பயன்படுத்தும் போது முகங்கொடுக்க நேரிடும் தடைகளை புலனாய்வு செய்தல் போன்ற நோக்கத்துடன் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப துறை சம்பந்தமாக இலங்கையுடன் நெருக்கமாக செயலாற்றும் நாடுகளின் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மாண்புமிகு அமைச்சர்கள், நோபல் பரிசுபெற்றோர்கள் உட்பட உரிய ஏனைய சருவதேச அமைப்புகளின் உயர் அதிகாரிகளினதும் இந்நாட்டின் அரச மற்றும் தனியார்துறை தொழினுட்பவியலாளர்களினதும் தொழில்முயற்சி யாளர்களினதும் புத்தாக்குநர்களினதும் பல்கலைக்கழக மற்றும் பாடசாலைகளின் உயர்தர மாணவர்களினதும் பங்குபற்றுதலுடன் "சமுதாயத்திற்கான விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மன்றம்" 2016 செப்தெம்பர் 07 ஆம் திகதியிலிருந்து 10 ஆம் திகதி வரை இலங்கையில் நடாத்தப்படும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.