2016-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிரான்ஸ் நாட்டினது தேசிய பிரயாண முகவர் சங்கத்தின் வருடாந்த மாநாட்டினை இலங்கையில் நடாத்துதல் - சம்மேளனங்கள் உட்பட பிற பல்வேறுபட்ட கூட்டங்களை நடாத்துவதற்கு ஏற்ற இடமொன்றாக இலங்கையை மேம்படுத்தும் நோக்கில் மேல் குறிப்பிட்ட மாநாட்டினை இலங்கையில் நடாத்தும் பொருட்டு இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு பணியகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை ஏற்று பிரான்சின் தேசிய சுற்றுலா முகவராண்மையானது (Syndicat National des Agences de Voyages - SNAV) அதன் வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை, பிரான்ஸ் சுற்றுலா பயணிகளுக்கிடையில் மனங்கவரும் கிராமம் ஒன்றாக மேம்படுத்தும் பொருட்டும் மேற்போந்த மாநாட்டினை இலங்கையில் நடாத்துவதற்கும் பங்களிப்பை நல்கும். இதற்கமைவாக இந்த மாநாட்டினை 2016 ஒக்றோபர் மாதம் 31 ஆம் திகதியிலிருந்து நவெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை இலங்கையில் நடாத்துவதற்குத் தேவையான வசதிகளை அரசாங்கத்தின் ஊடாக செய்யும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |