• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலநிலை பாதிப்புகளைக் குறைக்கும் கருத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஆற்றுப்படுகைகளுக்கான "ஆற்றுப்படுகை முதலீட்டுத் திட்ட அபிவிருத்தி" மதியுரைச் சேவையினை நடைமுறைப்படுத்தும் பணிகளை ஆரம்பித்தல்
- காலநிலை நிலைமைகள் மாற்றமடைவதனால் உருவாகக்கூடிய இடர்களுக்கு முகம்கொடுக்கும் ஆற்றலை விருத்தி செய்யும் பொருட்டு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல் இந்தக் கருத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கமைவாக கருத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் வௌ்ளம் மற்றும் வரட்சி போன்றவற்றினால் எதிர்காலத்தில் நிகழக்கூடிய இடரார்ந்த நிலைமைகளை இனங்கண்டு அவற்றை குறைப்பதற்கும் முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 10 ஆற்றுப்படுக்கைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் அண்மையில் வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட நீர்ப்பாசன மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மண்சரிவு அபாயம்மிக்க பாடசாலை கட்டடங்கள் உள்ள நிலப்பிரதேசத்தில் பாதுகாப்பு சுவர்களைப் பயன்படுத்தி சீர்செய்வதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, கருத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் பணிகளுக்கான மதியுரைச் சேவையை வழங்கும் ஒப்பந்தத்தை அமைச்சர வையினால் நியமனம் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.