2016-04-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய அனுப்பீட்டு மற்றும் விநியோக வலையமைப்பின் அபிவிருத்தி மற்றும் வினைத்திறன் மேம்பாட்டு கருத்திட்டத்திற்கு மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குதல் - யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையினால் வழங்கப்படும் கடன் உதவியின் கீழ் தேசிய அனுப்பீட்டு மற்றும் விநியோக வலையமைப்பின் அபிவிருத்தி மற்றும் வினைத்திறன் மேம்பாட்டு கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் தெஹிவளை, கல்கிசை, பத்தரமுல்லை பிரதேசங்களில் 11kV நிலக்கீழ் மின்சார விநியோகத்தினை அபிவிருத்தி செய்தல் மற்றும் 400kV அனுப்பீட்டு வழியொன்றை நிருமாணிக்கும் திட்டங்களுக்கு மதியுரைச் சேவையை பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |