• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைக்கழக மாணவர்களுக்கு துரித விடுதி நிருமாணிப்பு கருத்திட்டத்தின் கீழ் விடுதிகளை நிருமாணித்தல்
- 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளுக்கு அமைவாக அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் மாணவர்களுக்கு விடுதி வசதிகளை ஏற்பாடு செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகுமெனக் கருதப்படுவதோடு, இந்த பணியானது 2018 ஆம் ஆண்டளவில் நடைமுறைப்படுத்தி பூர்த்தி செய்யப்பட வுள்ளது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 60 விடுதிகளை நிருமாணிக் கும் கருத்திட்டத்தின் 2 ஆவது கட்டம் 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, இதன்மூலம் தேசிய பல்கலைக்கழகங் களினதும் இலங்கை உயர் கல்வி தொழினுட்ப நிறுவனங்களினதும் வசதிகளை வழங்கவேண்டிய மாணவர்களுள் சுமார் 62 சதவீதமானோருக்கு விடுதி விடுதி வசதிகளைச் செய்வதற்கான சாத்தியம் கிடைக்கப்பெறும். எதிர்காலத்தில் ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள தொழினுட்ப பாடநெறியினை கற்கும் மாணவர்க ளின் விடுதிப் பிரச்சினையை தீர்த்தல் உட்பட பொதுவாக பல்கலைக்க ழகங்களில் நிலவும் கடும் பிரச்சினையான விடுதி வசதிகளை வழங்கும் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வினை வழங்கும் நோக்கில் 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி தேசிய பல்கலைக்கழகங்களினதும் இலங்கை உயர் கல்வி தொழினுட்டப நிறுவனங்க ளினதும் மாணவர்களுக்காக 16 விடுதிகளை நிருமாணிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.