• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கமத்தொழில் வர்த்தக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
- இந்த நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணை அமைப்பொன்றான கமத்தொழில் அபிவிருத்திக்கான சர்வதேச நிதியமும் இணைந்து நிதியளிக்கப்படும் ஐந்து (05) வருடகால நிகழ்சித்திட்டமொன்றாகும். விவசாயிகளின் உற்பத்திகளுக்கு சிறந்த விலையினை வழங்குதல், விளைச்சல் நிலங்களை பயனுள்ள விதத்தில் தரமுயர்த்துதல் மற்றும் பண்ணை உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்த்தல் போன்றவற்றின் ஊடாக கிராமிய சிறுபண்ணை உரிமையாளர்களினதும் முக்கியமாக காணியற்ற இளைஞர்களினதும் வருமானத்தை 20 சதவீதத்திலிருந்து 30 சத வீதத்தால் அதிகரிக்கச் செய்வது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தனியார்துறையுடன் இணைந்து கமத்தொழில் உற்பத்திகளுக்கு 06 பெறுமதி சேர்க்கப்பட்ட கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் 5,648 கிராமிய கமத்தொழில் உற்பத்தியாளர்களின் வருமான நிலையை உயர்த்துவதற்கு நேரடியாக பங்களிப்புச் செய்துள்ளது. அதேபோன்று சிறிய அளவிலான கடன் வசதிகளை வழங்குவதன் மூலம் 2,710 கிராமிய தொழில்முயற்சியாளர்களுக்கு அவர்களுடைய உற்பத்தி நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்கான வாய்ப்புகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான நலன்களை மேலும் அதிகரிக்கும் விதத்தில் பண்ணை உற்பத்திகளை விருத்தி செய்துகொள்வதற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களுக்கு சிறிய அளவிலான கடன் வசதிகளை வழங்குவதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.