2016-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அமைச்சர்களின் விடயநோக்கெல்லைக்குரிய பணிகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தும் போது எழும் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளித்தல் - பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு உரிய அமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்பாடு செய்யும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றம் கூடும் இரண்டாவது வாரத்தின் செவ்வாய்க்கிழமை நாட்களில் பி.ப.2.00 மணியிலிருந்து அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டுமென மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அதன் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது. |