2016-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விசேட அதிரடிப்படையின் கட்டுகுருந்த பயிற்சி கல்லூரியின் 51 ஆம் இலக்க கட்டடத்தை மூன்று மாடிகள் கொண்டதாக நிருமாணித்தல் - இராணுவப் படைப்பிரிவுகளுக்குச் சமமான பயிற்சி, பிரமுகர் பாதுகாப்புப் பயிற்சி, கலகம் அடக்கும் பயிற்சி, தேடுதல் மற்றும் குண்டுகளை செயலிழக்கச் செய்யும் பயிற்சி வழங்குதல் அதேபோன்று உள்நாட்டு வௌிநாட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர் குழுக்களைப் பயிற்றுவித்தல் என்பன கட்டுகுருந்த பிரதேசத்திலுள்ள இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிரதான பயிற்சிக் கல்லூரியில் மேற்கொள்ளப்படுகின்றது. சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக இந்த பயற்சிக் கல்லூரியிலுள்ள சுமார் 75 வருடங்கள் பழமைவாய்ந்த விடுதிக் கட்டடங்களை அப்புறப்படுத்தி அதற்குப் பதிலாக பயிற்சிபெறும் 300 உத்தியோகத்தர்களுக்கு ஒரே தடவையில் வதிவிட வசதிகளை வழங்கக்கூடிய மூன்று மாடிக் கட்டடமொன்றை 88.2 மில்லியன் ரூபா செலவில் நிருமாணிப்பதற்கும் இதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை 2017-2019 நடுத்தவணைகால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் குறித்தொதுக்குவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. |