2016-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விசேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் நிருவாக, தங்குமிட மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகளை மேம்படுத்துவதற்காக 03 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல் - பிரமுகர் பாதுகாப்பு, கலகங்களைத் அடக்கும் செயற்பாடுகள், பாதாள உலக செயற்பாடுகளைத் தடுத்தல் அடங்கலாக சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் செயற்பாடுகளில் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையக்திலுள்ள உத்தியோகத்தர்கள் பெருமளவில் நாளாந்தக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக இந்த முகாமின் நிருவாக, தங்குமிட மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகளை மேம்படுத்துவதற்காக 03 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமொன்றை 58.6 மில்லியன் ரூபா செலவில் நிருமாணிப்பதற்கும் இதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை 2017-2019 நடுத்தவணைகால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் குறித்தொதுக்குவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.
|