2016-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விசேட அதிரடிப்படையின் மஹாஓயா முகாமின் ஆணைபெற்ற சிரேட்ட உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளுக்காக கட்டடமொன்றை நிருமாணித்தல் - சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக அம்பாறை மாவட்டத்தின் மஹாஓயாவிலுள்ள பொலிஸ் விசேட படையணிக்குச் சொந்தமான முகாமுக்கு கடமை மற்றும் சேவைகளுக்காக வருகைதரும் அரசாங்க உத்தியோகத்தர்களினதும் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களினதும் தங்குமிட வசதிகளுக்காக தற்போதுள்ள 40 வருட காலம் பழமை வாய்ந்த கட்டடத்திற்குப் பதிலாக புதிய கட்டடமொன்றை 24.6 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நிருமாணிப்பதற்கும் இதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை 2017-2019 நடுத்தவணைகால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் குறித்தொதுக்கு வதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. |