2016-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விசர்நாய்க்கடி நோய் தொடர்பிலான கட்டளைச் சட்டத்தையும் நாய்களைப் பதிவுசெய்யும் கட்டளைச் சட்டத்தையும் திருத்துதல் - மேற்போந்த கட்டளைச் சட்டங்களை தற்போதைக்கேற்றவாறு திருத்தி கூட்டு சட்டமொன்றாகத் தயாரிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம் உத்தேச திருத்தங்களையும் உள்ளடக்கி இந்த கட்டளைச்சட்டங்கள் இரண்டையும் இணைத்து புதிய சட்டமூலமொன்றை வரைவது சம்பந்தமான தொடர்நடவடிக்கைகளைச் செய்வதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதேபோன்று, கட்டக்காலி நாய்களினால் மக்கள் முகம்கொடுக்க நேரிடும் பிரச்சினைகள் மற்றும் சுகாதாரப் பாதிப்புக்கள் பற்றியும் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டதோடு, இது சம்பந்தமான பிரேரிப்புகளைச் சமர்ப்பிக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கும் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கும் அறிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. |