• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தியோகபூர்வ காலம் நீடிக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகளை முறைப்படுத்தல்
- உத்தியோகபூர்வ காலம் முடிவுக்கு வந்த உள்ளூராட்சி நிறுவனங்கள் பலவற்றின் உத்தியோகபூர்வ காலம் உள்ளூராட்சி அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மீது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூராட்சி நிறுவனங்கள் சிலவற்றில் அவற்றின் உத்தியோகபூர்வ பணிகளை நடாத்திச் செல்லும்போது பல்வேறுபட்ட முறைக்கேடுகள் நிகழுகின்றதாக உள்ளூராட்சி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதன் காரணமாக இது பற்றி ஆராய்ந்து சிபாரிசுகளைச் செய்வதற்காக பொது திறைசேரியின் பிரதிச் செயலாளர், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மேல் மாகாண சபையின் பிரதான செயலாளர் ஆகியோர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு, இந்தக் குழுவினால் செய்யப்பட்டுள்ள சிபாரிசின் பிரகாரம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.