• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கால்நடைகள் சரணாலயமொன்றை தாபிப்பதற்காக 100 ஏக்கர் காணியினை எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் குறித்தொதுக்குதல்
- தற்போது புல்தரையொன்றாக ஒதுக்கப்பட்டுள்ள மொனறாகலை மாவட்டத்தின் செவனகல பிரதேச செயலகப் பிரிவில் கொவுல்ஆற கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 200 ஏக்கர் காணியிலிருந்து 100 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியை கால்நடைகள் சரணாலயமொன்றை நடாத்திச் செல்லும் பொருட்டு 1993 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் கூட்டிணைக்கப்பட்டுள்ள எம்பிலிபிட்டிய ஶ்ரீ போதிராஜ அறநிலையத்தின் ஶ்ரீ போதிராஜ ஆதாரநிலையத்திற்கு பேரளவு வரியினை அறவிட்டு 30 வருட காலத்திற்கு குத்தகைக்களிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.