2016-04-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காலநிலை மாற்றம் சம்பந்தமான பரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல் - காலநிலை மாற்றம் சம்பந்தமான பரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் விழாவானது 2016 ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியன்று நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நாடாத்தப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக உலக போதைப்பொருள் பிரச்சினை சம்பந்தமான ஐக்கிய நாடுகளின் மாநாடும், நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளை வெற்றிகொள்ளும் பொருட்டு உயர்மட்ட கலந்துரையாடல்களும் இதற்கு அண்மித்த தினங்களில் நடாத்தப்படும். இலங்கையின் சார்பில் காலநிலை மாற்றம் சம்பந்தமான பரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டும் இதற்கு ஒருங்கிணைவாக நடாத்தப்படும் ஏனைய நிகழ்ச்சித்திட்டங்களுக்கு இலங்கையை பிரதிநிதிப்படுத்தி கலந்து கொள்ளும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கு அதிகாரத்தினைக் கையளிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |