2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
- அண்மைய மின்சார செயலிழப்பு பற்றியும் எதிர்காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவது சம்பந்தமாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியதுமான விடயங்கள் அமைச்சரவையினால் ஆழமாக கலந்துரையாடப்பட்டதன் பின்னர், பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன: (i) நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின்சார செயலிழப்பு சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினாலும் மாண்புமிகு பிரதம அமைச்சரினால் திரு.சீ.மாலியத்த அவர்களின் தலைமையின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவினாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கும். (ii) எதிர்வரும் காலங்களில் போதுமான அளவு மழை கிடைக்காவிட்டால் எழக்கூடிய மின்சார உற்பத்தி எல்லைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் தேவையான மின்சார அளவினை மாத்திரம் தனியார் துறையிடமிருந்து கொள்வனவு செய்வதற்குத் தேவைாயன நடவடிக்கைகளை எடுப்பதற்கும். அண்மைய மின்சார செயலிழப்பும் தடையின்றி மின்சாரம் வழங்குதலும் |