2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
- இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த உர மானிய நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பதிலாக 2016 வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளுக்கு அமைவாக விவசாயிகளுக்குத் தேவையான உரத்தினை தங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு திறந்த சந்தையில் கொள்வனவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் நாடு பூராவுமுள்ள சுமார் பத்து இலட்சம் விவசாயிகளுக்கு 2016 சிறுபோகத்தின் சார்பில் ஹெக்டயார் ஒன்றுக்கு 25,000/- ரூபா வீதம் ஆகக்கூடுதலாக இரண்டு ஹெக்டயார்கள் வரை பணமாக வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளுக்கு அமைவாக உரம் கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்குப் பணம் வழங்குதல் |