2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
- தெற்கு அதிவேகப் பாதையையும் அதனுடன் தொடர்புபடும் தேசிய நெடுஞ்சாலைகளினதும் பயன்பாட்டினை மேம்படுத்தும் பொருட்டு தெற்கு வீதி இணைப்பு கருத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் தொகையானது இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தின் கீழ் தெற்கு அதிவேகப் பாதையிலிருந்து மாதுருகொட வரை B 157 (கிழக்கு) வீதியின் 10 கிலோ மீற்றர்கள் கொண்ட வீதிப் பகுதியை ஐந்து வருடகால செயலாற்றுகையை அடிப்படையாகக் கொண்டு பராமரிப்பு அடங்கலாக புனரமைத்து விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள கேள்விதாரருக்கு வழங்குவதற்காக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. தெற்கு அதிவேகப் பாதையிலிருந்து மாதுருகொட வரை B 157 (கிழக்கு) வீதியை புனரமைத்தல் |