2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
- பெருந்தோட்ட மக்களின் சமூக, கலாசார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி வீடுகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் புதிய கிராமங்களையும் நகரங்களையும் நிருமாணிக்கும் பிரதான பணியானது மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் சமூக மேம்பாட்டுக்கான தேசிய திட்டம் (2016 - 2020) இந்த அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குறியிலக்குகளையும் உரிய காலப்பகுதிக்குள் அடைவதற்கும் அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ள பணிகளையும் கடமைகளையும் வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தும் பொருட்டும் அதிகாரசபை யொன்றைத் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, "மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை" தாபிக்கப்படும் பொருட்டு சட்டமூலமொன்றை வரைவதற்காக செயலணியொன்றை நியமிக்கும் பொருட்டு மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையைத் தாபிப்பதற்கான செயலணி |