2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
- சிக்கனமான மின்சார பாவனை பற்றி பொதுமக்களுக்கு அறியச் செய்வித்தல், மின் உபகரணங்கள் மற்றும் தொழினுட்பத்தைப் பயன்படுத்துதல் பல்வேறுபட்ட பொருளாதார, சமூக ஒழுங்குகளை மாற்றுதல் என்பன மூலம் மின்சாரத்துக்கான கேள்வியை குறைப்பதன் ஊடாக எதிர்வரும் ஐந்து (05) வருட காலத்திற்குள் சுமார் 1,000 மணித்தியால கிகாவொட் சக்தியை சேமித்துக் கொள்ளலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் எதிர்வரும் ஐந்து (05) வருட காலத்திற்கு புதிதாக ஆரம்பிக்க வேண்டிய சுமார் 500 மெகாவொட் ஆற்றல் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை நிருமாணிக்கும் தேவையை தவிர்த்துக் கொள்ளலாம். இதற்கமைவாக, மின்சாரத்தின் வினைத்திறன் மிக்க பாவனை மற்றும் காப்பினை மேம்படுத்தும் பொருட்டிலான நிகழ்ச்சித்திட்டமொன்று இலங்கை மின்சாரசபை, இலங்கை மின்சார தனியார் கம்பனி மற்றும் இலங்கை நிலைபேறுடைய வலுசக்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டமானது வர்த்தக, கைத்தொழில் அதேபோன்று அரசாங்க துறையினதும் விரிவான பங்களிப்புடன் நடைமுறைப்படுத்துவதற்காக சனாதிபதி செயலணியொன்றையும் தேசிய தொழிற்பாட்டுக் குழுவொன்றையும் நியமிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் மாண்புமிகு ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சக்தி கேள்வி முகாமைத்துவம், மின்சாரத்தை சிக்கனமாகப் பாவித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பில் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் |