2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
- இலங்கையில் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஆராய்ச்சி கலாசாரமொன்றை உருவாக்குவதற்கும் அது தொடர்பிலான ஊக்கத்தை மக்களிடத்தில் உருவாக்கும் நோக்கத்துடனும் ஏற்கனவேயுள்ள தேசிய ஆராய்ச்சி சபையை நியதிச்சட்ட நிறுவனமொன்றாக தாபிப்பதற்கு வரையப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. நியதிச்சட்ட நிறுவனமொன்றாக தேசிய ஆராய்ச்சி சபையைத் தாபித்தல் |