• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
- வங்காள விரிகுடாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளின் கண்ட எல்லையை நிர்ணயிக்கும் பொருட்டிலான விடயம் சம்பந்தமாக இலங்கை கண்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு அதன் விடயமுன்வைப்பினை 2009 ஆம் ஆண்டில் செய்தது. இலங்கையின் இந்த விடய முன்வைப்பை ஆணைக்குழு 2017-2022 காலப்பகுதிக்குள் கவனத்தில் எடுக்கும் சாத்தியம் நிலவுகின்றது. இங்கு இலங்கை சார்பில் முன்வைக்கப்படும் விடயங்களை உறுதிப்படுத்துவதற்கும் இது சம்பந்தமாக ஏனைய நாடுகளினால் சமர்ப்பிக்கக்கூடிய எதிர் கருத்துகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கும் சருவதேச ரீதியில் பெயர் பெற்ற நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
சமுத்திரச் சட்டம் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் கீழ் இலங்கை கண்ட எல்லை தொடர்பில் கண்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு விடய முன்வைப்புகளைச் செய்வதற்கு உரியதான பணிகள் தொடர்பில் நிபுணத்துவக் குழுவொன்றை நியமித்தல்