2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
- வௌ்ளம், வரட்சி உட்பட ஏனைய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக விவசாயிகளுக்கு அவர்களுடைய பயிர்கள் சேதமடைவதனால், அவர்கள் பெற்ற கடன்களை செலுத்துவதற்கு இயலாமற் போகும் சந்தர்ப்பங்களில் எழும் பிரச்சினையான நிலைமைகளின் போது விவசாயிகளுக்கும் வங்கி மற்றும் கமத்தொழில் கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்களுக்கும் காப்பினை வழங்கும் பொருட்டும் இடையூறின்றி அடுத்த போகத்தில் விவசாயிகளுக்கு கடன் பெற்றுக் கொள்ளும் வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும் தேசிய கமத்தொழில் கடன் பாதுகாப்பு திட்டமொன்றை உருவாக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் தேசிய கமத்தொழில் கடன் பாதுகாப்பு திட்டமொன்றைத் தாபித்தல் |