2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
- நாளுக்கு நாள் மருத்துவ சிகிச்சைக்காக அதிகரித்து செல்லும் செலவினை கவனத்திற்கொண்டு தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் முகாமிக்கப்படும் 'அக்கிரஹார காப்புறுதித் திட்டம்' மூலம் அரசாங்க ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் சுகாதார காப்புறுதி நலன்களை மேலும் விரிவுபடுத்துவது சம்பந்தமாக சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக இளைப்பாறிய அரசாங்க ஊழியர்களையும் உள்ளடக்கும் விதத்தில் நெகிழ்ச்சிமிக்கதாகவும் உயர் நலன்கள் கிடைக்கக்கூடியவாறும் 'அக்கிரஹார காப்புறுதித் திட்டம்' நடைமுறைப்படுத்தப்படுவதன் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் மூலம் அரசாங்க சேவையாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் வழங்கும் அக்கிரஹார நலன்களை திருத்துதல் |