2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
- 2007 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகள் கட்டளை, பதவிநிலை கல்லூரியானது நாட்டிலுள்ள உயர் யுத்த பயிற்சி நிறுவனமாகும். நல்லெண்ண வெளிப்பாடாக 2009 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் பாடநெறிகளை கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இதன் மூலம் இலங்கைக்கு உரியதாகும் நற்பெயர், அந்நிய செலாவணி, அறிவு, அனுபவம் பரிமாறல் என்னும் விடயங்களை கருத்திற்கொண்டு 2017 ஆம் ஆண்டில் வெளிநாட்டு உத்தியோகத்தர்களுக்கு கட்டண அடிப்படையில் பத்து பயிற்சி வாய்ப்புகளையும் 22 இலவச பயிற்சி வாய்ப்புகளையும் வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. வெளிநாட்டு உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு சேவைகள் கட்டளை, பதவிநிலை கல்லூரியில் பாடநெறிகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல் |