2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நிலையான கமத்தொழிலின் மூலம் வறுமையை இல்லாதொழிக்கும் நிலையத்திற்கு வருடாந்த பங்களிப்புத் தொகையைச் செலுத்துதல் - நிலையான கமத்தொழிலின் மூலம் வறுமையை இல்லாதொழிக்கும் நிலையம் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் மூலம் நிருவகிக்கப்படும் துணை நிறுவனமொன்றாவதோடு, வாழ்வாதாரத்திற்கு முக்கியமாக இரண்டாம்நிலை பயிர்களின்மீது தங்கியிருக்கும் கஷ்ட பிரதேசங்களில் உள்ள கிராமிய மக்களின் வாழ்க்கை நிலையை கட்டியெழுப்புவதற்கு உறுப்புநாடுகளில் பொருத்தமான கொள்கைகளை ஊக்குவித்தல், வறுமையை ஒழித்தல் போன்றவை சார்பில் கமத்தொழிலுக்குரியதாக அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வது இதன் முக்கிய நோக்கமாகும். இலங்கை இந்த நிலையத்தின் அங்கத்தவர் ஒருவராக நாட்டின் கமத்தொழில் அபிவிருத்திக்கு உரிய சேவைகளைப் பெற்றுக்கொள்தல் அடங்கலாக பல்வேறுபட்ட நன்மைகளைப் பெற்றுள்ளது. இதற்கமைவாக இந்த நிலையத்தின் அங்கத்தவர் ஒருவராக செலுத்தப்பட வேண்டிய பங்களிப்புத் தொகையை தொடர்ந்தும் செலுத்துவதற்காக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |