2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நட்டஈடும் பணிக்கொடையும் வழங்குதல் - திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் - திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் தாபிக்கப்படுவதற்காக ஒன்றிணைக்கப்பட்ட நிறுவனங்களில் சேவையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு நட்டஈடு மற்றும் பணிக்கொடையை கட்டம்கட்டமாக வழங்குவதற்குத் தேவையான நிதியை ஏற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினாலும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |