2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொல்கஹவெல, பொத்துஹர மற்றும் அலவ்வ ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டம், குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் கருத்திட்டம் அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டம் ஆகியவற்றுக்கு உள்நாட்டு வங்கிகளிடமிருந்து நிதி பெற்றுக் கொள்ளல் - பொல்கஹவெல, பொத்துஹர மற்றும் அலவ்வ ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டம், குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் கருத்திட்டம் அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்தக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக உள்நாட்டில் பெறப்பட வேண்டிய நிதி உள்நாட்டு வங்கியொன்றிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கு அதிகாரத்தினைக் கையளிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |