• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறை மாநகர சபை மற்றும் பிரதேச சபை அதிகார பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவ கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- முறையாக கழிவுகளை அகற்றும் பிரதேசமொன்றையும் உயிர்வாயுவை பயன்படுத்தி கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றையும் மாத்தறை கொட்டவில பிரதேசத்தில் தாபிக்கும் கருத்திட்டமொன்று தெயட்டகிருள - 2015 தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக திட்டமிடப்பட்டிருந்தது. 2015 தெயட்டகிருள கண்காட்சி இரத்துச் செய்யப்பட்டதும் இந்தக் கருத்திட்டத்தின் பணிகள் ஸ்தம்பித்துள்ளது. இதற்கமைவாக மாத்தறை மாநகர சபை மற்றும் மாத்தறை பிரதேச சபை என்பவற்றுக்குச் சொந்தமான பிரதேசங்களில் பாரிய பிரச்சினையாக நிலவும் கழிவு இடும் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தற்போது தற்காலிகமாக ஸ்தம்பித்துள்ள இந்த கழிவு முகாமைத்துவக் கருத்திட்டத்தை தனியார்துறையின் ஒத்துழைப்புடன் துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.