• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சூழல் தொகுதி பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவக் கருத்திட்டம்
- இனங்காணப்பட்ட பிரதேசங்களில் கூர் உணர்வுமிக்க சூழல் தொகுதி முகாமைததுவம், மேம்படுத்தல் சம்பந்தமாக அரசாங்க நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் உள்ள ஆற்றலை விருத்தி செய்தல், யானைகள் - மக்கள் உறவை உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தயாரித்தல், நிலைபேறுடைய இயற்கை வளங்களின் பாவனை மற்றும் பாதுகாப்பதன் மூலம் பொதுமக்களுக்கு நலன்களை உரியதாக்கும் நோக்கில் சூழல் தொகுதி பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவக் கருத்திட்டம் 2016-2021 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்கு நிதி வழங்குவதற்கு உலக வங்கியின் சருவதேச சமவாயத்தினால் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, 45 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்குச் சமமான கடன் தொகையொன்றை வழங்குவதற்கு உலகவங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உலக வங்கியின் சருவதேச சமவாயத்துடன் கடன் இணக்கப்பேச்சுக்களை நடாத்துவதற்கும் இதற்குரிய நிதி உடன்படிக்கையைச் செய்து கொள்வதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.