• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முல்லைத்தீவு மாவட்ட செயலக கட்டட நிருமாணிப்பு - கட்டம் II
- வடக்கு மாகாணத்திற்குரிய முல்லைத்தீவு மாவட்டம் சுனாமி அனர்த்தத்தினாலும் அதேபோன்று நீண்டகாலம் நிலவிய மோதல் நிலை காரணமாகவும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டமொன்றாகும். இந்த மாவட்ட மக்களினது வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட செயலாளரின் மேற்பார்வையின் கீழ் அபிவிருத்தி பணிகள் பெருமளவு முன்னெடுக்கப்பட்டாலும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட இடவசதி இந்த அபிவிருத்தி பணிகளை வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் நிறைவேற்றுவதற்கு தடையாய் உள்ளது. இதற்கமைவாக, மாவட்டத்திலுள்ள மக்களுக்கு சிறந்த சேவையொன்றை வழங்குவதற்காக மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படும் சகல சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் நோக்குடனும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் II ஆம் கட்டத்திற்கான நிருமாணிப்பு வேலைகளை 328 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நிருமாணிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.