2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டம் - யாழ்ப்பாணம் நகரத்தை மேம்படுத்துதல் - சுற்றாடல் ரீதியில் நிலையானதும் சிறந்த இணைப்பையும் கொண்ட நகர முறைமையொன்றை அபிவிருத்தி செய்தல் திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தக் கருத்திட்டத்தின் கீழ் உலக வங்கி கடன் வசதியூடாக கண்டி மற்றும் காலி ஆகிய நகரங்களை திறமுறை நகரங்களாக உரிய வசதிகளுடன் அபிவிருத்தி செய்தலானது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான நகரமொன்றாக யாழ்ப்பாணம் நகரமும் இனங்காணப்பட்டுள்ளதோடு, இதற்கமைவாக தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |