2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கசகஸ்த்தான், அஸ்தானாவில் நடைபெறவுள்ள வேர்ல்ட் எக்ஸ்போ - 2017 - "வேர்ல்ட் எக்ஸ்போ" கண்காட்சி இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை உலகின் பிரதான நகரங்களில் பல்வேறுபட்ட தொனிப்பொருளின் கீழ் நடாத்தப்படுவதோடு, இத்தடவை இந்தக் கண்காட்சியானது "எதிர்கால வலுசக்தி" என்னும் தொனிப்பொருளின் கீழ் 2017 யூன் 10 ஆம் திகதியிலிருந்து செப்ரெம்பர் 10 ஆம் திகதி வரை கசகஸ்த்தான், அஸ்தானா நகரத்தில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளுமாறு கசகஸ்தான் குடியரசினால் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த கண்காட்சிக்கு இலங்கையின் பங்குபற்றுதலை ஒழுங்கு செய்யும் பொருட்டு ஆணையாளர் அதிபதி ஒருவரை நியமிப்பதற்கும் இலங்கையில் சிறிய மற்றும் மத்தியதர அழகுப்பூக்கள் மற்றும் கன்றுகள் பயிற்செய்கையாளர்கள் உட்பட உற்பத்தியாளர்களினால் அவர்களுடைய உற்பத்திப் பொருட்களை ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறைக்கு அமைவாக இங்கு கண்காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பினை ஏற்பாடு செய்வதற்குமாக கைத்தொழில், வாணிப அலுவல்கள் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |