2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பூகோள காலநிலை மாற்றங்கள் தொடர்பான உடன்படிக்கையும் தேசிய திறமுறை ஒப்பந்தமும் (பூகோள வெப்பமாதலை குறைப்பதற்கான தேசிய பங்களிப்பு) - அதிகளவு புதைபடிவ எரிபொருள் எரிதல், கைத்தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல், காடுகளை அழித்தல் மற்றும் சுற்றாடல் மாசடைதல் என்பன காரணமாக பூகோள வெப்பமடைதலை அதிகரித்து வருவதோடு, இந்த நூற்றாண்டின் இறுதியில் பூகோள வெப்பமடைதல் 4 பாகை செல்சியசால் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதென எதிர்வு கூறப்பட்டுள்ளது. பூகோள வெப்பமாதல் அதிகரிக்கின்றமை காரணமாக நிகழும் காலநிலை மாற்றங்கள் மனிதனின் வாழ்க்கையின்பால் பிரதிகூலமான விதத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும். 2015 நவெம்பர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து திசெம்பர் மாதம் 11 ஆம் திகதிவரை பிரான்ஸ் பரீஸ் நகரத்தில் நடாத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றங்கள் பற்றிய கட்டமைப்பு சமவாயத்தின் 21 ஆவது கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட பரீஸ் உடன்படிக்கை பிரகடனத்திற்கு அமைவாக 2100 ஆம் ஆண்டளவில் பூகோள வெப்பமாதல் அதிகரித்தல் தற்போது நிலவும் உஷ்ண மட்டத்திலிருந்து மேலும் 2 பாகை செல்சியசிற்கு மேற்படாமல் இருப்பதற்கும் இந்த மட்டத்தை 1.5 பாகை செல்சியற்சிற்கு குறைவாக பேணுவற்கும் சகல முயற்சிகளையும் எடுப்பதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது. இலங்கையும் இதற்கு உடன்பாடு தெரிவித்து இந்த பரீஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் இந்த உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கையின் பங்களிப்பு சார்பில் திட்டமிடப்பட்டுள்ள வாகன வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காகவுள்ள பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்து வதற்குரிய கொள்கை மற்றும் திட்டங்களை வகுத்தமைப்பதற்கும் "இலங்கையில் காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆணைக்குழுவொன்றை" தாபிக்கும் பொருட்டு சட்டங்களை வரைவதற்கும் சுற்றாடல் நட்புறவுமிக்க "பசுமை - சிறந்த கிராமங்கள்" உருவாக்குவதனை நோக்காகக் கொண்டும் சமூக அமைப்புகளுடன் இணைந்து "பசுமை மிக்க இலங்கை" என்னும் நிகழ்ச்சித்திட்டத்தை 2016-2020 காலப்பகுதிக்குள் 10,000 கிராமங்களை உருவாக்கு வதற்கும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |