• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கான உடன்படிக்கையை நீடித்தல்
- உருவான சுற்றாடல் பிரச்சினை காரணமாக கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்ட வேலைகள் 2015 பெப்ரவரி மாதத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டதோடு, இந்தக் கருத்திட்டம் தொடர்பில் முறையானதும் முழுமையான சுற்றாடல் தாக்கம் பற்றிய அறிக்கையொன்று கோரப்பட்டது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டவட்டமான வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாகவும் எதிர்வரும் காலத்தில் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டிய சில விடயங்களுக்கும் உட்பட்டு, கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் வேலைகளை மீள ஆரம்பிப்பதற்கு இடமளிப்பதற்கு பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக உரிய கருத்திட்ட கம்பனியுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை 2016 மார்ச் 15 ஆம் திகதியிலிருந்து ஆறு (06) மாத காலத்திற்கு நீடிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.