• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை துறைமுக கருத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணி சார்பில் நட்டஈடு செலுத்துவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்தல்
- இந்த கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான அபிவிருத்தி பணிகள் ஏற்கனவே முடிவடைந்து வருகின்றதோடு, அதற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நட்டஈட்டினை வழங்குவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினாலும்சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.