2016-03-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களுத்துறை போதி நம்பிக்கை பொறுப்பு சபைக்கு பொது வாகன தரிப்பிடம் ஒன்றுக்காக களுத்துறையிலுள்ள காணியொன்றை குறித்தொதுக்குதல் - களுத்துறை போதிக்கு நாளாந்தம் வருகை தரும் யாத்திரிகர்களின் வாகனங்களை நிறுத்திவைக்கும் வசதிகளை விருத்தி செய்வதற்காக களுத்துறை நகரத்தில் காலி வீதியில் களுகங்கைக்கு குறுக்காகவுள்ள இரண்டு பாலங்களுக்கும் நடுவில் அமைந்துள்ளதும் அதனை உடைமையாக்கிக் கொள்வதற்கு உரியதான நட்டஈட்டுத் தொகையையும் அதற்கான வட்டித் தொகையையும் களுத்துறை போதி நம்பிக்கை பொறுப்பு சபையினால் ஏற்றுள்ளமை அத்துடன் இந்த சபைக்கு உடைமை கையளிக்கப்பட்டுள்ள "தியம்மதலாவ" என்னும் 33.75 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணித் துண்டை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் களுத்துறை போதி நம்பிக்கை பொறுப்பு சபைக்கு சட்டபூர்வமாக உடைமையாக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |