2016-03-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறிய மற்றும் நுண்பாக கைத்தொழில்களின் தலைமைத்துவ மற்றும் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்தும் கருத்திட்டம் - கட்டம் III (சுழற்சி நிதியம்) இன் கீழ் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - இறக்குமதி பதிலீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும், புதிய தொழினுட்பத்தைப் பயன்படுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும், வௌிநாட்டு சந்தைக்கு பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் அரசாங்கத்தின் நடைமுறையிலுள்ள பேரினப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு அமைவாக உற்பத்தி ஆற்றலை அதிகரிக்கக்கூடிய கைத்தொழில்களை மேம்படுத்தும், பிற கடன் திட்டங்களினால் தழுவப்படாத சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அனைத்து தொழில்முயற்சியாளர்களுக்கும் கடன் வழங்குதல் மேற்போந்த கடன் திட்டத்தின் மூலம் செய்யப்படுகின்றது. இந்த கடன் திட்டத்தில் பயன்பெறும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் தொழில்முயற்சியாளர்களினதும் இந்த கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பங்களிப்பு கடன் வழங்கும் நிறுவனங்களினதும் கோரிக்கையின் பேரில் தற்போது பொதுக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துணைக் கடன் எல்லையை 25 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்தினால் பங்களிப்பு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான மீள் நிதி விகிதாசாரத்தை 100 சதவீதம் வரை அதிகரிப்பதற்கும் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |