• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிவேக பாதைக்கான பிரயாணிகள் சேவை உரிமப் பத்திரங்கள் வழங்குதல்
- அதிவேக பாதைக்கான பிரயாணிகள் சேவை உரிமப் பத்திரங்களை வழங்குவதற்காக வசுக்களை சேவையில் ஈடுபடுத்துபவர்களை தெரிவுசெய்யும் பொருட்டிலான கேள்வி நடவடிக்கை முறையொன்று 2015 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, இந்த திட்டத்தின் கீழ் ஆகக்கூடிய விலைமுன்வைப்பினை செய்தவர்களுக்கு உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்டதன் காரணமாக பொது பாதைகளில் சேவைகளை வழங்கிய வசு உரிமையாளர் களுக்கு அதிவேகப் பாதையில் போக்குவரத்து சேவைகளை வழங்கும் வாய்ப்பு இல்லாமற்போனது. இதற்கமைவாக, மாற்று வழிமுறையொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட அதிவேகப் பாதைக்கான உரிமப்பத்திரங்களை வழங்கும்போது இணங்கியொழுகப்பட வேண்டிய தகுதி விதிகளையும் புள்ளி வழங்கும் முறையும் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அமுல்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைமுறையை அமுல்படுத்தும் போது காணக்கிடைத்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு வௌிப்படையான வழிமுறையொன்றை அறிமுகப் படுத்துவதற்கான சிபாரிசுகளைச் சமர்ப்பிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.