2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சார்க் இளைஞர் சாசனத்தை கைச்சாத்திடுதல் - இளைஞர்களின் சுகாதாரம், நல்லொழுக்கம், உரிமை மற்றும் ஆற்றல் என்பவற்றை மேம்படுத்துதல் "சார்க் இளைஞர் சாசனம்" மூலம் முக்கியமாக எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று இதன் நோக்கங்களை வெற்றிகொள்ளும் போது தெற்காசிய வலய இளைஞர்களின் அறிவினை பெற்றுக் கொள்வதன் மூலம் தேசிய அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கும், இளைஞர்களுக்கு நலன்களைப் பெற்றுக் கொடுத்து திறமைகளையும் வாய்ப்புகளையும் பயனுள்ள வகையில் பயன்படுத்தி அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதும் இதன் ஊடாக மேலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, இந்த ஆண்டின் மார்ச் மாதம் 17 ஆம் திகதி நேபாளம் கத்மண்டு நகரத்தில் நடாத்தப்படும் சார்ச் அமைச்சர்களின் சம்மேளனத்தின் 36 ஆவது கூட்டத் தொடரில் சார்க் இளைஞர் சாசனத்தை இலங்கையும் கைச்சாத்திடுவதற்கும் அதனை செயல்வலுவாக்கம் அளிப்பதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |