2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பத்தரமுல்ல, மாலம்பே, அத்துருகிரிய மற்றும் சுற்றுவட்ட வீதியையும் இணைத்துப் புதிய களனி பாலத்திலிருந்து இராஜகிரிய வரை தூண்களின் மீது நிருமாணிக்கப்படும் நெடுஞ்சாலை - கொழும்பு நகரம் , பகுதி நகர பிரதேசம் மற்றும் அதிவேக பாதை என்பற்றுக்கு இடையிலான பாதைகளின் இணைப்பினை மேம்படுத்துவதற்கும் தற்போதுள்ள வாகன நெரிசலை குறைப்பதற்குமாக தூண்களின் மீது நிருமாணிக்கப்படும் நெடுஞ்சாலை வலையமைப்பொன்றை கொழும்பு நகரத்தினுள் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், உத்தேச புதிய களனி பாலத்திலிருந்து ஆரம்பித்து இராஜகிரிய வரை 6.9 கிலோ மீற்றர் நீளம் கொண்ட 4 செல்பாதைகளைக் கொண்ட தூண்கள் மீது நிருமாணிக்கப்படும் நெடுஞ்சாலையொன்று நிருமாணிக்கப்படவுள்ளது. இதன் இரண்டாவது கட்டத்தில் அத்துருகிரிய பிரதேசத்தில் சுற்றுவட்ட நெடுஞ்சாலையுடன் இணையும் விதத்தில் தெற்கு பக்கமாக நீடிக்கப்படும். அதேபோன்று தூண்களின் மீது நிருமாணிக்கப்படும் உத்தேச இந்த பகுதியின் வடக்கு பக்கம் புதிய களனி பாலத்திற்கு அண்மையில் கட்டுநாயக்கா அதிவேக பாதையுடன் இணைக்கப்படும். இதற்கமைவாக இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்காகவும் இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |