2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வாகன வாயு வௌியேற்ற சான்றிதழ் வழங்கும் கருத்திட்டம் - வாகன வாயு வௌியேற்றம் தொடர்பிலான தரங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மோட்டார் வாகனங்களை பரிசோதித்து சான்றிதழ்களை வழங்கும் நோக்கத்திற்காக தத்துவம் பெற்ற வாகன வாயு வெளியேற்ற பரிசோதனை நிலையங்களை நாடு முழுவதும் செயற்படுத்தும் பொருட்டு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துடன் தற்போது உடன்படிக்கையைச் செய்து கொண்டுள்ள ஒப்பந்த காலம் 2016‑07‑01 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இதற்கமைவாக, எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதிக்கு வாகன வாயு வெளியேற்ற பரிசோதனை நிலையங்களை உருவாக்கி வாயு வெளியேற்றத் தரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான தனியார்துறை கம்பனிகள் சிலவற்றை ஒப்பந்தக்காரர்களாக தெரிவு செய்யும் பொருட்டு கொள்வனவு பணிகளை ஆரம்பிப்பதற்கும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான வாகனங்களை இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்குள் உட்படுத்திக் கொள்ளும் பொருட்டு இலங்கை போக்குவரத்துச் சபையின் வாகன பரிசோதனை நிலையங்களை 09 மாகாணங்களில் நிருமாணிப்பதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |