2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பம்பலபிட்டி தொடர்மாடி மனைகளின் மீள் அபிவிருத்தி - மேற்போந்த வீட்டு கட்டடத் தொகுதி ஏக்கர் 10 பேர்ச்சர்ஸ் 15.55 விஸ்தீரணமுடைய காணியில் உள்ள போதிலும் இதில் 259 தொடர்மாடி வீடுளும் 10 வர்த்தக கூறுகளும் மட்டும் உள்ளன. அத்துடன் அரைநூற்றாண்டு பழமையான கட்டடம் கடலுக்கு அண்மையில் அமைந்துள்ளமையினால் பெருமளவில் சேதமுற்று பாதுகாப்பற்ற நிலைக்கு ஆட்பட்டுள்ளது. பாரிய அபிவிருத்தி கொண்ட இந்த மனையிடத்தில் "பம்பலப்பிட்டி தொடர்மாடி மனைகளின் மீள் அபிவிருத்திக்கான கருத்திட்டமானது முதலீட்டுச்சபையினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீட்டாளருடன் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் அஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|