2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இந்திய உதவியின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு 150 பொதிகள் கொண்ட மீன்பிடிக் கருவிகளை வழங்குதல் - 30 வருட காலமாக நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவு பிரதேச கடற்றொழிலாளர்கள் அவர்களுடைய மீன்பிடிக் கருவிகள் இல்லாமற்போனவை அத்துடன் அவை சேதமடைந்தமை காரணமாக பாரிய இன்னல்களுக்கு ஆளாக நேரிட்டுள்ளது. இந்த மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சின் கோரிக்கையின் பேரில் படகுகளுக்கு வெளியே பொருத்தும் எஞ்சின்கள் மற்றும் மீன்பிடி கருவிகள் 150 பொதிகளை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க இந்தக் கருவிகளை இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்காக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |