• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்திய கைத்தொழிற்பேட்டைகளிலிருந்து கைத்தொழிற்சாலைகளை தாபிப்பதற்காக காணித் துண்டுகளைக் குறித்தொதுக்குதல்
- பிரதேச மட்டத்தில் கைத்தொழில் மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு பிராந்திய கைத்தொழிற்பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படு கின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமைச்சின் கருத்திட்ட மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசின் பிரகாரமும் உரிய தகைமைகளை பூர்த்தி செய்துள்ள ஏற்ற முதலீட்டாளர்களுக்கு / நிறுவனங்களுக்கு உரிய கைத்தொழிற் பேட்டைகளி லிருந்து காணித்துண்டுகளை குறித்தொதுக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.