2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தரை மட்டத்திற்கு மேலாக தூண்களின் மீது தாபிக்கப்படும் துறைமுக நுழைவு நெடுஞ்சாலைக் கருத்திட்டம் - ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக அங்கீகாரம் கோரல் - கொழும்பு மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களிலிருந்து கப்பற் சரக்குகள் மற்றும் கொள்கலன்களை கொழும்புக் கோட்டைக்குத் தடையின்றி கொண்டு வருவதற்கும் கொழும்பு நகரப் பிரதேசத்தில் தற்போது நிலவும் வாகன நெரிசலைக் குறைக்கும் பொருட்டும் அதிவேகப்பாதை வலையமைப்புடன் கொழும்பு கோட்டைப் பிரதேசத்தை இணைப்பதற்காக பேலியகொடை புதிய களனிப் பாலத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை 5.8 கிலோ மீற்றர் நீளம் கொண்ட தரை மட்டத்திற்கு மேலாக தூண்களின் மீது தாபிக்கப்படும் நெடுஞ்சாலையொன்றை 36 பில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் இதற்கு தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்வதற்காகவும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |