2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை ஒட்டாவா சமவாயம் அல்லது மனிதர்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைத் தடைசெய்யும் சமவாயத்திற்கு செயல்வலு வாக்கம் அளித்தல் - இலங்கையில் நிலவிய மோதல் நிலைமை காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் நிலக்கண்ணி மற்றும் வெடிப்பொருட்களின் எச்சங்கள் மூலம் கடுமையாக பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளன. உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்த வர்களை பாதுகாப்பாக மீளக்குடியமர்த்தும் போது நிலக்கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணிகள் மிக முக்கியமானதாகுமென்பதோடு, இந்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு இந்த நிலக்கண்ணி வெடிகள் மற்றும் யுத்தஎச்சங்கள் மூலம் ஏற்படும் அனர்த்தம் தடுக்க வேண்டியுள்ளது. இதற்கமைவாக, தேவையான பின்னணியை ஏற்படுத்தும் ஒட்டாவா சமவாயம் என அழைக்கப்படும் மனிதர்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைத் தடைசெய்யும் சமவாயத்தை இலங்கை அரசாங்கத்தினால் செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினாலும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |